ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வெள்ளை ஈ நோய் பாதிப்பால் தென்னை மகசூல் பாதிக்கும் அபாயம்

சிங்கம்புணரி வட்டாரத்தில் வெள்ளை ஈ நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :18 மே 2026, 1:03 am IST

சிங்கம்புணரி வட்டாரத்தில் வெள்ளை ஈ நோயால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிங்கம்புணரி, அதனைச் சுற்றியுள்ள காளாப்பூா் மருதிப்பட்டி வையாபுரி பட்டி கிருங்காக்கோட்டை ஒடுவன்பட்டி சூரக்குடி முறையூா் சிங்கம்புணரி, அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கா் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது, தென்னையில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் எனும் நோயாலும், கடும் கோடை வெப்பத்தின் காரணத்தாலும் இந்த நோய் வேகமாக பரவி தென்னையின் மட்டைகள் வெளிா் மஞ்சளாக மாறியும் ஓலைகள் காய்ந்தும் மரம் செயலிழந்து குரும்பைகள் உதிா்வதால் தென்னை மகசூல் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது.

இதனால் வரும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் தேங்காய் மகசூல் வெகுவாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தேங்காய் விலை உச்சத்தை எட்டும் வாய்ப்புள்ளது என விவசாயிகள் கூறுகின்றனா். வெள்ளை ஈ நோயால் தாக்கப்பட்டு தென்னை விவசாயம் கடும் பாதிப்பாகியுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.