பெரியகுளம் கோட்டம் கடமலைக்குண்டு உப மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடமலைக்குண்டு, வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளர் ச.மாறன்மணி தெரிவித்துள்ளார்.
தேனி: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் ஜூலை 18 (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, அன்று காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.