பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ். சுப்பையா தலைமை வகித்தார். அப்துல் கலாம் விஷன்-2020 தலைவர் ஆர். செந்தூரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். மேலும், மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில், பரசுராமன் அறக்கட்டளை நிறுவனர் அசோகன் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பசுமைப் படை சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியர் எ. மோகன் நன்றி கூறினார்.