தேனியில் புதன்கிழமை நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி கூட்டுறவு விற்பனை நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தேனி நகர திமுக செயலர் இலங்கேஸ்வரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.