வீரபாண்டி பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பார்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சிவமுருகன் தெரிவித்துள்ளார்.