தேனியில் சனிக்கிழமை நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் சேகுவேரா தலைமை வகித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார்.
மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில அதிகார பட்டியலில் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.