போடியில் காதல் திருமண தகராறில் பெண்ணின், தந்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
போடி முதல்வர் காலனியை சேர்ந்தவர் முருகன் (48). இவரது மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு உதவியதாக, இதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் ரஞ்சித் என்பவரை முருகன் கண்டித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ரஞ்சித், இவரது உறவினர்கள் லோகேஷ், பாலசுப்பிரமணி மனைவி பூபதி ஆகியோர் சேர்ந்து முருகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து முருகன் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகனை தாக்கிய 3 பேரையும் கைது செய்தனர்.