தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெறும் இக்குறைதீர் கூட்டத்தில், அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். எனவே, ஓய்வூதியதர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர், ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.