தேனி மாவட்டம் கம்பத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரையும், பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவையும் முகநூலில் அவதூறு பரப்பிய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் புலவர் தெருவைச் சேர்ந்தவர் சையது உசேன்(34). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். வெள்ளிக்கிழமை இவர் தனது முகநூலில் பசும்பொன்முத்துராலிங்க தேவரையும், பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவையும் முகநூலில் அவதூறு செய்து புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு கம்பம் வடக்கு காவல் நிலையத்தை பார்வர்டு பிளாக் கட்சியினர் முற்றுகையிட்டனர். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மலைச்சாமி அளித்த புகாரின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் எம்.சீமைச்சாமி தலைமையிலான தனிப்படையினர் தேனியில் சையது உசேனை சனிக்கிழமை கைது செய்தார்.