இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

தேனி மாவட்டம்  உத்தமபாளையம் அருகே  உள்ள உ.அம்மாபட்டியில் இளம்பெண்ணை கடத்தி

தேனி மாவட்டம்  உத்தமபாளையம் அருகே  உள்ள உ.அம்மாபட்டியில் இளம்பெண்ணை கடத்தி மானபங்கம் செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை  கைது செய்தனர்.
உ.அம்மாபட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை கடந்த சில நாள்களுக்கு முன் காணவில்லை.  பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். 
புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் அஜித்(21) இளம் பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அஜீத்,  சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். போலீஸார் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com