தேனி மாவட்டம், கம்பம்-கோம்பை செல்லும் ஊத்துக்காடு நாககன்னியம்மன் கோயில் அருகே ரோந்து வந்த போலீஸாரை கண்டதும் இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மற்றொருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரிக்கையில், கம்பம், உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த கருத்தக்கண்ணு மகன் அரசன் (36) என்றும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மற்றொரு இளைஞர் விட்டுச் சென்ற 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.