மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 87 ஆவது பிறந்த நாள் விழா வரும் அக்.15ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் ஆண்டிபட்டியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலை கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வர் ரா.சுரேஷ் தலைமை வகித்தார். விஷன் 2020 அமைப்பின் தலைவர் ர. திருச்செந்தூரன் "கனவு மெய்ப்பட வேண்டும்' என்றத் தலைப்பில் பேசினார். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கதலி நரசிங்க பெருமாள் வரவேற்றார். முனைவர் முத்துராமன் நன்றி கூறினார். இதில் தேனி கலை இலக்கிய மையத் தலைவர் பாண்டியராஜன், பூஞ்சோலை அறக்கட்டளை தலைவர் சரவணன், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.