பெரியகுளத்தில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், 41 ஆவது நவராத்திரி இலக்கிய விழா புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாளில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் தலைமையில் சொல்லாமல் சொன்ன சுகம் என்ற தலைப்பில் பேருரை ஆற்றப்பட்டது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை பேராசிரியை சரசுவதி ராமநாதன் தலைமையில், அன்னை தந்த பரிசு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை, நெஞ்சை அள்ளும் சிலம்பு என்ற தலைப்பில் இரா.தமிழ்ச்செல்வியும், அள்ளக்குறையா அமுதசுரபி என்ற தலைப்பில் ரெ. தமிழ்ச்செல்வியும் சொற்பொழிவாற்றினர். சனிக்கிழமை, பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் தலைமையில் நெஞ்சக்கோயில் என்ற தலைப்பிலான சொற்பொழிவு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி, அக்டோபர் 19 ஆம் தேதி வரை பிரம்மஞானமந்திரம் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றத்தினர் செய்து வருகின்றனர்.