போடியில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
போடி புதூரை சேர்ந்தவர் முருகன் (53). இவருக்கு சொந்தமான மாந்தோப்பு போடியில் உள்ளது. இந்த தோப்பில் போடி புதூர் போயன்துறையைச் சேர்ந்த சரஸ்வதி (44), அத்துமீறி நுழைந்து, மாங்காய் பறித்தாராம்.
இதனை கண்ட முருகன் சரஸ்வதியை கண்டித்துள்ளார். அதையடுத்து, முருகன் வீட்டுக்கு அரிவாளுடன் சென்ற சரஸ்வதி, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரிவாளை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் போடி நகர் போலீஸார் வழக்குப்பதிந்து, சரஸ்வதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.