தேனி அருகே உள்ள வாழையத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிராஜ் மகன் சூர்யபிரகாஷ்(21). இவர், தேனி-போடி சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கோடாங்கிபட்டி பகுதியில் அதே திசையில், கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ராஜாமணி மகன் வனராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த சூர்யபிரகாஷ் பலத்த காயமடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.