தேனி மாவட்டம், கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பள்ளி நிறுவனர் எம். சுருளிவேலுச்சாமி நினைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் எம்.எஸ்.எஸ். காந்தவாசன் தலைமை வகித்து, இப்பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பம் பகுதியில் கல்விச் சேவையாற்றி வரு நினைவு கூர்ந்தார். இணைச் செயலர் சுகன்யா காந்தவாசன், சிறந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக, முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். இதில், துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.