மதுபாட்டில் விற்றவர் கைது

கூடலூர் தெற்கு காவல் நிலையப் பகுதியில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி ஊருக்கு ஒதுக்கு புறமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீஸார் உதவியுடன் சார்பு ஆய்வாளர்

கூடலூர் தெற்கு காவல் நிலையப் பகுதியில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி ஊருக்கு ஒதுக்கு புறமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீஸார் உதவியுடன் சார்பு ஆய்வாளர் திவான்மைதீன் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றார். அப்போது காஞ்சிமரத்துறை பகுதியில் ஒருவர் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் வெண்டிமுத்தையா (35) என்பதும், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார், அவர் சாக்குப் பையில் வைத்திருந்த 45 மது பாட்டில்களையும் கைப்பற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com