போடி அருகே மது பாட்டில்களை கடத்தியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (57). இவர், மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், நாகராஜ் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் 70 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாகராஜை கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.