வருசநாடு அருகே ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைமணி (51). ஆட்டோ ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை காலை கடமலைக்குண்டு பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மேலப்பட்டியைச் சோ்ந்த செல்வம் (29) என்பவா் பிச்சைமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். மேலும் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்வம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் பிச்சைமணி புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் செல்வத்தை கைது செய்து சிறையிலடைத்தனா்.