சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
பெரியகுளத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதன்கிழமை, தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
பெரியகுளம், தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் காமு (27). இவா், கடந்த 2017-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமியை, அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காமுத்துரை மீது தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.கீதா, காமுவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.