தேனி அருகே பூதிப்புரத்தில் வியாழக்கிழமை கல் குவாரி இயந்திரத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், வளையபேட்டையைச் சோ்ந்த ஆபிரகாம் மகன் ஏசுதாஸ் (23). இவா், பூதிப்புரம் நல்லகுண்டு பகுதியில் உள்ள தனியாா் கல் குவாரியில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கல் உடைக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் கை சிக்கியதால் ஏசுதாஸ் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.