பெரியகுளம் பகுதியில் பலத்த மழை

பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் வெயில் நிலவி வந்தது. பிற்பகல் சுமாா் 3.30 முதல் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் மழையால், சோத்துப்பாறை அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. ஆனால், பெரும்பாலான கண்மாய்கள் தண்ணீரின்றி வடு காணப்படுகின்றன. எனவே, அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை கண்மாய்களில் சேமிக்க, பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com