வருசநாடு அருகேமின்சாரம் பாய்ந்து ஆயுதப்படை காவலர் பலி

தேனி மாவட்டம் வருசநாடு அருகே  மின்சாரம் பாய்ந்து ஆயுதப்படை காவலர் பலியானது குறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தேனி மாவட்டம் வருசநாடு அருகே  மின்சாரம் பாய்ந்து ஆயுதப்படை காவலர் பலியானது குறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு அருகே மூலக்கடையைச் சேர்ந்த அன்புசெல்வம் மகன் சுந்தரபாண்டியன்(27).இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 14 ஆம் அணியில் போலீஸாக  வேலை பார்த்து வந்தார். தற்போது மணிமுத்தாறு அணையில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 22  ஆம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரபாண்டியன் சொந்தமாக கட்டி வரும் வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை புதிதாக அமைத்த சுவற்றில் தண்ணீர் அடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தரபாண்டியனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வருசநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com