உத்தமபாளையம், சின்னமனூரில் திருக்கல்யாண வைபவம்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயிலில்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயிலில்,  புதன்கிழமை  காலை 10.14 மணிக்கு, திருக்காளாத்தீஸ்வர்-ஞானாம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது.  
திருக்காளாத்தீஸ்வர் வெண்பட்டிலும், ஞானாம்மன் பச்சைப்பட்டிலும்  சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்ட  பெண் பக்தர்களுக்கு மாங்கல்யம், குங்கும் வழங்க்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோயில் வளாகத்திலே சுவாமி,அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. 
சின்னமனூர்: சின்னமனூர் அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவில்  பூலாநந்தீஸ்வர்- சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் மணமேடைக்கு  வந்தனர். வெண்பட்டில் பூலாநந்தீஸ்வரும் , பச்சைப்பட்டில் சிவகாமியம்மனும் காட்சியளித்தனர்.  திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பெண் பக்தர்களுக்கு மாங்கல்யம் வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com