தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், புதிய வலைப் பயிற்சி கிரிக்கெட் மைதானம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்லூரி நிர்வாகக் குழு பரிந்துரையின்படி புதிய வலைப் பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டது. கல்லூரித் தாளாளரும், செயலருமான எம். தர்வேஷ் முகைதீன் தலைமை வகித்து, மைதானத்தை திறந்து வைத்தார்.
கல்லூரி முதல்வர் ஹெச். முகமது மீரான் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அக்பர்அலி வரவேற்றார்.
இவ்விழாவில், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.