தம்பதி மீது தாக்குதல்:  இளைஞர்கள் 2 பேர் கைது

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவர்களுக்கு

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவர்களுக்கு உதவச் சென்ற தம்பதியை தாக்கியதாக, இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அரண்மனைப்புதூர், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கமலசேகரன். இவர், தனது மனைவியுடன் வீட்டின் முன்பு நின்றிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற அரண்மனைப்புதூர் வசந்தம் நகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் லட்சுமணன், வீரபத்திரன் மகன் முத்துப்பாண்டி ஆகியோர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளனர். 
உடனே, கமலசேகரனும், அவரது மனைவியும் அவர்களுக்கு உதவச் சென்றனராம். அப்போது, கமலசேகரனும், அவரது மனைவியும்தான் தங்களை கீழே தள்ளி விட்டதாகக் கூறி, லட்சுமணன், முத்துப்பாண்டி மற்றும் அங்கு வந்த அவர்களது நண்பர்களான அரண்மனைப்புதூர் வசந்தம் நகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் ராமர், சுருளி மகன் சுப்பிரமணி ஆகியோர், தம்பதியை தாக்கி காயப்படுத்தியுள்ளனர். 
இது குறித்து கமலசேகரன் அளித்த புகாரின்பேரில், லட்சுமணன் உள்பட 4 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, ராமர், முத்துப்பாண்டி ஆகியோரைக் கைது செய்தனர். லட்சுமணன், சுப்பிரமணி ஆகியோரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com