ஆண்டிபட்டியில் ரவீந்திரநாத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வியாழக்கிழமை இரவு

மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வியாழக்கிழமை இரவு  ஆண்டிபட்டியில் திறந்த வெளி வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட சக்கம்பட்டி, கடை வீதி, குமாரபுரம், பேருந்து நிலையம், கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக ஆண்டிபட்டி வைகை அணை சாலைப்பிரிவில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அப்போது அவர் பேசியது: உங்கள் தேவையை நான் நிறைவேற்றுவேன். ஆண்டிபட்டி சக்கம்பட்டி பகுதியில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கிறீர்கள். உங்களுக்கு மத்திய,  மாநில அரசுகளின் சலுகைகள் அனைத்தையும் பெற்றுத்தர பாடுபடுவேன் என்றார்.
இதில், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் லோகிராஜன், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கையன், ஒன்றிய துணை செயலாளர் அமரேசன், பேரூர் செயலாளர் முத்துவெங்கடராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com