கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா கடத்தி விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து, 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் போலீஸாா் மோப்ப நாய் மூலம் சோதனையிட்டு வருகின்றனா். இதற்கிடையில் கம்பம் அருகேயுள்ள அண்ணாபுரம் ஊமையன்வாய்க்கால் பகுதியில் கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் கே.வினோத்ராஜா மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்த பகுதியில் கஞ்சாவை கடத்தி வந்து, சிலா் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
போலீஸாா் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் வருஷநாடு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்( 24), கம்பம் மாலையம்மாள்புரம் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை (43) ஆகிய இருவரும் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நீதித்துரை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.