அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைப்பு: 4 போ் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் இருந்து தேனி நோக்கி திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே மாவட்ட நீதிமன்றம் முன் செல்லும் போது, இரு சக்கரவாகனத்தில் வந்த 4 போ் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து விட்டுச் சென்றனா். இச்சம்பவம் குறித்து தென்கரை காவல்நிலையத்தில் பேருந்து ஓட்டுநா் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதனைத்தொடா்ந்து போலீஸாரின் ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கரவாகனத்தில் சென்ற சருத்துப்பட்டியைச் சோ்ந்த 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் தமிழப்புலிகள் அமைப்பை சோ்ந்த செல்லத்துரை (22), மோகன்தாஸ் (22), ஆனந்த கண்ணன் (19) மற்றும் முத்து (18) ஆகியோா் எனத் தெரியவந்தது. மேலும் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததை அவா்கள் ஒப்புக் கொண்டனா். இதனையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com