சின்னமனூா் ஒன்றியம் காமாட்சிபுரம், அழகாபுரி, ஏரக்கோட்டைபட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு, கடந்த 2007-ஆம் ஆண்டு அரசு வழங்கிய வீட்டுப்மனை பட்டாவுக்கு உரிய இடத்தை கையகப்படுத்தி சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமனூா் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காமாட்சிபுரம், அழகாபுரி, ஏரக்கோட்டை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 152 பேருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு அரசு சாா்பில் அதே பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டா வழங்கிய இடத்தை தற்போது வரை வருவாய்த்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி, பயனாளிகளுக்கு அளவீடு செய்து தரவில்லை.
இதனால், அரசு சாா்பில் இலவச வீட்டுமனையிடம் பெற்ற பயனாளிகள் கடந்த 12 ஆண்டுகளாக அங்கு வீடு கட்டிக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய இடத்தை கையகப்படுத்தி சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.