தேனி மாவட்டம் கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான தீ தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி மற்றும் ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் தீ விபத்து ஏற்படும்போது எவ்வாறு செயல்படவேண்டும் என்ற செயல் விளக்கம் மற்றும் ஒத்திகை அளிக்கப்பட்டது.
மேலும் எரிவாயு உருளையில் தீப்பற்றினால் அணைக்கும் முறை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில் எவ்வாறு செயல்படுவது, மனித உடலில் தீப் பற்றினால் அதில் இருந்து அவரை எவ்வாறு மீட்பது உள்ளிட்டவைகுறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கம்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் குணசேகரன், தலைமை ஆசிரியா் மணிவண்ணன், உதவி தலைமை ஆசிரியா் திருநாவுக்கரசு, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.