தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின் வாரியம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.