தேனி மாவட்ட ம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இலவச கல்வி பயிற்சி மையம் மற்றும் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் மைதீன் ஆண்டவர்புரத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு இலவசக் கல்வி பயிற்சி மையம் மற்றும் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில், இலவச கல்வி பயிற்சி மைய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினார். முன்னதாக செயற்குழு உறுப்பினர் சாதிக் வரவேற்றார்.