போடியில் மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

போடியில்  சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

போடியில்  சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
போடி நகர் காவல் நிலைய போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  பேருந்து நிலையத்தில், மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த காளிராஜ் (26), சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதேபோல்  தேவாரம் சாலையில் வேன் நிறுத்துமிடத்தில், போடி குலாலர்பாளையத்தை சேர்ந்த ராஜாங்கம் (70)  மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். 
இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com