பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மார்க்கண்டேய பள்ளி தலைமையாசிரியர் ஆர்.தர்மராஜ் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜ் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.