பெரியகுளம் அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் சாவு

பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை வேன் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை வேன் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
 பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (43). இவர் தனது உறவினர்களுடன் வெள்ளிக்கிழமை வேனில் குள்ளப்புரத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார். இவர்கள் சென்ற வேனை மேல்மங்கலத்தை சேர்ந்த முத்தையா (22) என்பவர் ஒட்டினார். வேன் குள்ளப்புரம் அருகே செல்லும் போது நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த மேல்மங்கலத்தைச் சேர்ந்த முத்துவேல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வடிவு, ரவி, செல்லமுத்து மற்றும் கலாமணி ஆகியோர் காயமடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com