உத்தமபாளையத்தில் மருந்தாளுனர் மாணவருக்கு கத்திக் குத்து: இளைஞர் கைது

உத்தமபாளையத்தில் தங்கையை காதலித்து ஏமாற்றியதாக மருந்தாளுனர் படிப்பு படிக்கும் மாணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

உத்தமபாளையத்தில் தங்கையை காதலித்து ஏமாற்றியதாக மருந்தாளுனர் படிப்பு படிக்கும் மாணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (24). இவரது சகோதரியை, அதே பகுதியைச் சேர்ந்த தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனர் படிப்பு படித்துவரும் அலெக்ஸாண்டர் மகன் மனோஜ் (23) என்பவர் காதலித்து ஏமாற்றிவிட்டாராம். இதனால், மதன்குமாரின் தங்கை  சில நாள்களுக்கு முன் இறந்துவிட்டாராம். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் மதன்குமாருக்கும், மனோஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனோஜை கத்தியால் குத்திவிட்டு மதன்குமார் தப்பியோடிவிட்டார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் மனோஜை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவலின்பேரில், உத்தமபாளையம் போலீஸார் தப்பியோடிய மதன்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com