ஜெயமங்கலத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் சமுதாயக்கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் சமுதாயக்கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்துக்கு, ஜெயமங்கலம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா தலைமை வகித்தார்.     இக்கூட்டத்தில், 100 நாள்கள் வேலை குறித்தும், கிராம மக்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. இதில், ஒன்றிய மேற்பார்வையாளர் விஜயகாந்தி, சமூக தணிக்கை அதிகாரி பிர்லா மேரி மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஜெயமங்கலம் ஊராட்சி செயலர் கோபால் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com