போடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் வழங்கும் முகாம்

போடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் கடன் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


போடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் கடன் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மண்டல முதுநிலை மேலாளர் ஜேசுராஜ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். மதுரை மண்டல மேலாளர் திரிசங்கு முன்னிலை வகித்தார். போடி கிளை மேலாளர் என்.செல்வன் மற்றும் வங்கி பணியாளர்கள் பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு புதிய வங்கிக் கடன், வீட்டுக் கடன், தனி நபர் கடன், நகைக் கடன் வழங்குவது குறித்தும், இவற்றை பெறுதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினர். மேலும் வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு தொடங்குதல், இணையதள வங்கி சேவை, மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி வரும் வங்கி சேவைகள் குறித்தும் விளக்கினர். முகாமில் சிலர் கடன் விண்ணப்பங்களை அளித்தனர். அவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு தொடங்கவும் படிவம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை போடி வங்கி கிளை பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com