கூடலூரில் மதுபோதையில் மனைவியை கல்லால் தாக்கி காயப்படுத்திய கணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூர் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷோபனா(28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஈஸ்வரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். வியாழக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரனை, இவரது மகள் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமைடந்த ஈஸ்வரன் மகளைத் தாக்க முயற்சித்துள்ளார். இதை மனைவி ஷோபனா தடுக்கவே ஆத்திரமடைந்த ஈஸ்வரன், அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவியைத் தாக்கினார். இதில் ஷோபனாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஷோபனா அளித்தப் புகாரின் பேரில், ஈஸ்வரனைப் போலீஸார் கைது செய்தனர்.