தேனி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் தேசிய மாதிரி கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு- மாவட்டத்தில் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் தேசிய மாதிரி ஆய்வு கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் மக்களின் சமூக, பொருளாதார நிலையைக் கணக்கெடுக்கும் வகையில், தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களின் வருவாய், சேமிப்பு, மூலதனம், செலவினம், விவசாயம் சார்ந்த பணிகள் உள்ளிட்ட புள்ளி விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலர்களிடம் பொதுமக்கள் தேவையான விபரங்களை தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.