கண்டமனூர், கோவிந்தநகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 29-ம் தேதி (சனிக்கிழமை) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளர் சொ.லட்சுமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கண்டமனூர் துணை மின் நிலையத்தில் ஜூன் 29 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சார பெறும் பகுதிகளாக கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.