பெரியகுளத்தில் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்: இளைஞர் பலி

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதியதில், இளைஞர் உயிரிழந்தார். 

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதியதில், இளைஞர் உயிரிழந்தார். 
         பெரியகுளம், முனிசிபல் காலனியை சேர்ந்த ராசு மகன் சுப்பிரமணி (28).  ஆட்டோ ஓட்டுநரான இவர், திங்கள்கிழமை இரவு வடுகபட்டிக்கு சென்றுவிட்டு பெரியகுளம் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, பெரியகுளத்திலிருந்து ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற மற்றொரு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
       விபத்தை ஏற்படுத்திய மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான ரெங்காபுரத்தைச் சேர்ந்த முருகவேல் மற்றும் இருவர் தப்பியோடிவிட்டனராம். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com