தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தென்கரை, மேலச்சொக்கநாதபுரம், பூதிப்புரம் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.70.48 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பேரூராட்சிகள் துறை அலுவலர்கள் கூறியது: ஆண்டிபட்டியில் கீழ ஓடைத்தெரு, ஜம்புலிபுத்தூர் சாலை ஆகிய இடங்களிலும், தென்கரையில் ராஜவாய்க்கால் அருகே உள்ள பகுதி, மேலச்சொக்கநாதபுரத்தில் வினோபாஜி காலனி, காந்திஜீ காலனி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிபட்டி ஆகிய 8 இடங்களில் பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் நகர சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.70.48 லட்சம் செலவில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.