சிற்றுந்து மோதி  தியாகியின் வீடு சேதம்

போடி அருகே வியாழக்கிழமை சுதந்திரப் போராட்டத் தியாகியின் வீட்டில் மினி பேருந்து மோதியதில் வீடு சேதமடைந்தது.

போடி அருகே வியாழக்கிழமை சுதந்திரப் போராட்டத் தியாகியின் வீட்டில் மினி பேருந்து மோதியதில் வீடு சேதமடைந்தது.
     போடி அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி ரகுபதி கோதண்ட விஜயராமன். இவர் காலமாகிவிட்டார். இவரது மனைவி மயில்தாய் (93),  அம்மாபட்டி மெயின் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் உப்புக்கோட்டை கிராமத்திலிருந்து போடி நோக்கிச் சென்ற சிற்றுந்து பிரேக் பிடிக்காததால், சுதந்திரப் போராட்டத் தியாகியின் வீட்டில் மோதி நின்றது. இதில், வீட்டின் முன்பக்கம் சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களும், பேருந்தில் பயணம் செய்தவர்களும் காயமின்றி தப்பினர். 
    இது குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com