போடி குலாலர்பாளையம் பங்காரு மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் ராஜபிரதீப் (23). இவர் அரம் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். மதுபழக்கத்துக்கு அடிமையான இவர் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனை இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜபிரதீப், சனிக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜபிரதீப் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.