பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

பெரியகுளத்தில் அன்னாவித்தேவர் சிலம்பப் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியகுளத்தில் அன்னாவித்தேவர் சிலம்பப் பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டிக்கு அன்னாவித்தேவர் சிலம்பப் பயிற்சியின் பள்ளியின் தலைவர் அ.ராமதளபதி தலைமை வகித்தார். தலைமை ஆசான் மு.சசிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் தனித்திறன் போட்டி, நடசாரி சிலம்பம் மற்றும் அலங்கார சிலம்பம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 6 வயது முதல் 17 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கைலாசநாதர் கோயில் ஆலோசகர் வி.ப.ஜெயபிரதீப் மற்றும் உலக சிலம்ப விளையாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் எஸ்.சுதாகரன் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இப்போட்டியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அன்னாவித்தேவர் சிலம்ப பயிற்சி பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com