தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோயில் சிவாச்சாரியார் ஏகாம்பரம் கும்பத்திற்கு யாகம் வளர்த்து, தீபாராதனை காட்டி சிறப்பு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.