பெரியகுளத்தில் நடைபெறும் அகில இந்திய கூடைப்பந்து நாக் அவுட் போட்டியில் வியாழக்கிழமை 8 அணிகள் மோதின.
பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் மே 15 முதல் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் வடுகபட்டி அணியை திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணி வெற்றிபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் செங்கோட்டை, ரெட் போர்ட் அணியை தெற்கு ரயில்வே அணி 30- 61 என்ற புள்ளி கணக்கிலும், அதே போல் தெலங்கானா ஓய்.எம்.சி. அணியை திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணி 68 -65 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றி பெற்றன.
சென்னை, விளையாட்டு விடுதி அணி, கரூர் டெக்ஸ்டைல் அணியை 98-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. செகந்திராபாத் ஏ.ஓ.சி அணி , சேலம் திருவேணி கூடைப்பந்தாட்ட கழக அணியை 102-58 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வரும் 19 ஆம் தேதி மாலையில் இருந்து லீக் சுற்றி போட்டிகள் தொடங்குகின்றன. வரும் 21 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது.