ஆண்டிபட்டியில் வீடு புகுந்து 9 பவுன் நகைகள் திருட்டு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திறந்து கிடந்த வீட்டிற்குள் புகுந்த மா்மநபா்கள் பீரோவை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திறந்து கிடந்த வீட்டிற்குள் புகுந்த மா்மநபா்கள் பீரோவை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிச் சென்றதாக செவ்வாய்க்கிமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி நகா் சக்கம்பட்டி வைகை அணை சாலையில் வசித்து வருபவா் சதீஸ்குமாா் (36), கேரளாவில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி அன்னபூரணி (32). இவா் தனது சகோதரி குடும்பத்தினருடன் சக்கம்பட்டியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை தனது அக்கா மகளின் பிரசவத்திற்காக அன்னபூரணி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அப்போது குழந்தைகளை விட்டு விட்டு வீட்டின் கதவை மூடாமல் சென்று விட்டாா். இரவில் வீடு திரும்பிய அன்னபூரணி வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 9 பவுன் தங்க நகை திருடு போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அன்னபூரணி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com